NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Sunday 21 February 2016

அண்ணசாலை – ன் 31 வது கோட்ட மாநாடு 20.02.2016

அண்ணசாலை – ன்  31 வது கோட்ட மாநாடு 20.02.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு  D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து வீரம் செறிந்த சிறப்புரை ஆற்றினார்.  நமது முன்னாள் P3 மாநிலச் செயலர் திரு G.P.  முத்துகிருஷ்ணன் அவர்கள், R3 மாநிலச் செயலர் திரு பொன் குமார் அவர்கள் முன்னாள் P4 மாநிலச் செயலர் திரு. K. குணசேகரன் அவர்கள், முன்னாள் மாநிலப் பொருளர் திரு  H.M. அப்துல்காதர் அவர்கள் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தினர். பல்வேறு கோட்ட/கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்தினர்நடைபெற்ற மாநாட்டில் திருமதி. G லீலாபாய்  அவர்கள் தலைவராகவும் திரு. A சிவசண்முகம் அவர்கள் செயலராகவும் திருமதி. P. மீனாட்சி அவர்கள் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  புதியதாக கோட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. A சிவசண்முகம் அவர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவுற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.

                       கவுஸ்பஷா
                      மாநிலச் செயலர்


No comments:

Post a Comment