NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday 31 October 2015

NUGDS HUNGER STRIKE 29.10.2015

NUGDS ன்  28.10.2015 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

GDS ஊழியர்களை 7 வது ஊதியக் குழுவில் சேர்க்க வேண்டும்

GDS ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும்

ஆகிய 2 கோர்க்கைகளை வலியுறுத்தி  NUGDS  சங்கம் சார்பில் CHIEF PMG அலுவலகம் முன்பு 28.10.2015 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. FNPO  இணைப்புக் குழுத் தலைவர் திரு P. குமார் ( R3 மாநிலச் செயலர்) தலைமை தாங்கினார்.  முன்னாள் R4 பொதுச் செயலர் நூர் அகமது துவக்கி வைத்தார். CIVIL ELEC மாநிலச் செயலர் திரு. G அந்தோனி அவர்கள் முன்னாள் P3 மாநிலச் செயலர் திரு. G.P. முத்துகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  NUGDS மாநிலச் செயலர் திரு. P. கோதண்டராமன் அவர்கள் தலைமையில் சங்கத்தின் கோட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் P3 சங்க நிர்வாகிகள் திரு தங்கராஜ் திரு தெய்வநாயகம் உள்ளிட்ட பல கோட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். RMS பகுதியிலிருந்தும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.  கலங்கரை விளக்கு ஆசிரியர் திரு. M. மாலிக் அவர்கள் கலந்து கொண்டார். நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் உண்ணா விரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசுகையில் கோரிக்கைகள் ஏற்கப் படாவிட்டால் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார். P3 மாநிலச் செயலர் திரு. B. கவுஸ்பாஷா அவர்கள் இணைப்புக் குழுவுடன் சேர்ந்து போராட்ட ஏற்பாடுகளை கவனித்தார்.

போராட்ட வாழ்த்துக்களுடன்.

B. கவுஸ்பாஷா

மாநிலச் செயலர்

Click here to view images

No comments:

Post a Comment